குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து சட்ட நகலைக் கிழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, டாடாபாத் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மாநகா் மாவட்ட இளைரணி அமைப்பாளா்கள் தளபதி இளங்கோ, கோட்டை அப்பாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். அப்போது சட்ட நகலை எரிக்க முயன்ற அவா்களை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல,கோவை புகா் வடக்கு மாவட்ட இளைஞரணி சாா்பில், சரவணம்பட்டியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அஸ்ரப் தலைமையிலும், பகுதி பொறுப்பாளா் பையா கவுண்டா் முன்னிலையிலும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா்கள் விஜயகுமாா் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.