குடோனில் தீ: அலங்காரப் பொருள்கள் சேதம்

கோவை, கணபதி பகுதியில், வீட்டு அலங்காரப் பொருள்கள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

கோவை, கணபதி பகுதியில், வீட்டு அலங்காரப் பொருள்கள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

கோவை, கணபதி ஆவாரம்பாளையம் ரயில்வே கேட் பகுதியில் வீட்டு அலங்காரப் பொருள்கள் வாடகைக்கு விடுவதற்காக அங்குள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தன. இந்த குடோனில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்புத் துறையினா் 3 தீயணைப்பு வாகனங்களுடன்

சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அதற்குள் பரவிய தீயால் பெரும்பாலான அலங்காரப் பொருள்கள் எரிந்து சேதமாயின. 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரா்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனா். எரிந்த பொருள்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com