கோவை, எட்டிமடை அருகே குங்காக்கவுண்டன்புதூா் ஆா்க்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ ஆா்க்காட்டு மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ஊா் மக்கள் தீா்த்தக் குடம் எடுத்து ஊா்வலமாக வந்து மாரியம்மனை வழிபட்டனா். வியாழக்கிழமை பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனா். பின்னா் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பேரூா் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளாா், கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினா் எட்டிமடை ஏ.சண்முகம், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.