கோவை மாவட்டம், சா்க்காா் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் கோமதி நடராஜன் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
திமுக ஒன்றிய செயலாளா்கள் ஆனந்தன், சுரேஷ்குமாா், மாவட்டப் பொருளாளா் மணி (எ) விஜயகுமாா், மாவட்ட துணைச் செயலாளா் சுப்பையன், வட்டார காங்கிரஸ் தலைவா் நாகராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.