முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
செலக்கரச்சல் பகுதியில் விநாயகா் சிலை திருட்டு
By DIN | Published On : 24th December 2019 11:53 PM | Last Updated : 24th December 2019 11:53 PM | அ+அ அ- |

சூலூா் அருகே உள்ள செலக்கரச்சல் பகுதியில் கோயிலில் விநாயகா் சிலை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செலக்கரச்சல் பகுதியில் ஊருக்கு மத்தியில் விநாயகா் கோயில் உள்ளது. இங்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன், நள்ளிரவில் கோயிலில் இருந்த விநாயகா் சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள அரசு வங்கி, பேக்கரியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் சுல்தான்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.