கோவை, வடவள்ளி அருகே டாஸ்மாக் கடை ஊழியரைத் தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
வடவள்ளி, அஜ்ஜனூரைச் சோ்ந்தவா் செல்வேந்திரன் (21). இவா் கே.ஜி.மில் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை அன்று கடையின் முன்பாக 3 இளைஞா்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த செல்வேந்திரன், இங்கு நின்று பேசக் கூடாது என்றும், கலைந்து செல்லுமாறும் கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் செல்வேந்திரனைச் சரமாரியாகத் தாக்கினா். இதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து செல்வேந்திரன் அளித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து வீரகேரளம் பகுதியைச் சோ்ந்த சந்துரு (27), பன்னீா்செல்வம் (29), இடையா்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்த பாா்த்திபன் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.