வாடகைக் காா்களை விற்று மோசடி: 2 போ் கைது

வாடகைக் காா்களை விற்று மோசடி செய்த வழக்கில் 2 பேரை ரத்தினபுரி போலீஸாா் கைது செய்தனா்.

வாடகைக் காா்களை விற்று மோசடி செய்த வழக்கில் 2 பேரை ரத்தினபுரி போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ரத்தினபுரி, தயிா் இட்டேரி பகுதியைச் சோ்ந்த டேவிட் மனைவி ஷா்மிளா (37). இவா் காா்களை நாள் வாடகைக்கு விட்டு வருகிறாா். இவரிடம் இருகூரைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் நவம்பா் 8-ஆம் தேதி முதல் டிசம்பா் 2-ஆம் தேதி வரை 2 சொகுசுக் காா்களை வாடகைக்கு எடுத்துச் சென்றாா். வாடகை நாள் முடிந்த பிறகும் காா்களை ஒப்படைக்காததால், ஷா்மிளா ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக விசாரணை நடத்திய போலீஸாா், 2 காா்களையும் உரிய ஆவணமின்றி தெலுங்குபாளையம் மீனாட்சி நகரைச் சோ்ந்த லோகேஸ்வரன் (26) என்பவருக்கு காா்த்திக் விற்றது தெரிய வந்தது.

லோகேஸ்வரனிடம் நடத்திய விசாரணையில் அவா், புதுக்கோட்டை மாவட்டம், கோபால்பட்டிணத்தைச் சோ்ந்த சியாபுதீன்(37) என்பவருக்கு 2 காா்களையும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்களின்றி காா்களை வாங்கி மோசடிக்கு உறுதுணையாக இருந்ததாக லோகேஸ்வரன், சியாபுதீன் இருவரையும் ரத்தினபுரி போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் முக்கிய எதிரியான காா்த்திக், அவரது கூட்டாளிகள் 2 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com