ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், ஸ்கோப் திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை (பிப்ரவரி 16) நடைபெறுகிறது.
அரசுப் பள்ளிகளில், 11ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஸ்கோப் (ள்ஸ்ரீர்ல்ங்) திட்டம் நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 20 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள 20 பள்ளிகளில் பணிபுரியும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ( ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர்) மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் கோவை, ராஜவீதி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (பிப்ரவரி 16) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.