முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ.99 ஆயிரம் அபராதம் வசூல்
By DIN | Published On : 04th January 2019 07:13 AM | Last Updated : 04th January 2019 07:13 AM | அ+அ அ- |

கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நடத்திய சோதனையில் பல்வேறு கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 99 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை, பயன்பாட்டுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதில் உணவுப் பொருள்களை மடிக்க பயன்படுத்தும் பாலிதீன் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மாநகராட்சி நிர்வாகத்தினர் கோவையில் பல்வேறு கடைகளில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டு 817 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை கைப்பற்றி ரூ.53 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நகரில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில், 5 மண்டலங்களில் சேர்த்து மொத்தம் 290 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.99 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது தவிர பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை ஒப்படைத்தனர். இதில் வியாழக்கிழமை மட்டும் 5 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 122 கிலோ சேகரிக்கப்பட்டது.