துடியலூரை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இங்குள்ள ராமசாமி நகரில் வசிப்பவர் தாவீத் (53). தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார்.திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்: இதே நகரில் குடியிருப்பவர் முருகேசன் (43). இவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. என்ன பொருள்கள் காணாமல் போயின என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து இருவர் தரப்பிலும் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.