துடியலூரை அடுத்த ஆனைகட்டி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தடாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் திடீரென மாரடைப்பால் வெள்ளிக்கிழமை மாலை இறந்தார்.
தடாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன். இவர் தமிழக - கேரள மாநில எல்லையான ஆனைகட்டி சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பணியில் இருந்துள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அருகிலிருந்த காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரனுக்கு கஸ்தூரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.