சூலூர் பேரூராட்சி அலுவலகத்தின் முன் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கனகராஜ் தலைமை வகித்தார். சூலூர் நகர செயலாளர் கார்த்திகை வேலன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 39 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கரவாகனங்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து சூலூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். பின் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு வழங்கும் பணியைத் துவக்கி வைத்தார்.
விழாவில் அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தோப்பு அசோகன், சூலூர் ஒன்றியச் செயலாளர் மாதப்பூர் பாலு, ஏ.பி.அங்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தனசேகர் செய்திருந்தார்.