மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.522 கோடி நேரடி வங்கிக் கடன்: அமைச்சர் தகவல்

கோவை மாவட்டத்தில் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.522 கோடி நேரடி வங்கிக் கடன் வழங்க


கோவை மாவட்டத்தில் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.522 கோடி நேரடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகையை விடுவிக்கவும், சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தனிநபர், குழு கடன், சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடன், நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் வழங்குவது குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட அளவிலான வங்கி அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
மாநில அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2018-19 ஆண்டில் வங்கிக் கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் டிசம்பர் 2018 வரை ரூ.8 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரிக்குள் ரூ.15 ஆயிரம் கோடி கடன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும்.தமிழ்நாட்டில் தற்போது சுமார் 6.63 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 1.01 கோடி உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் இதுவரை ரூ.7,726 கோடியை தங்களின் மொத்த சேமிப்பாகக் கொண்டுள்ளன. மேலும் வங்கிக் கடனாக இதுவரை மொத்தம் ரூ.58,649 கோடி ரூபாய் இந்த குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கோவை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் 2016-17 ஆம் ஆண்டில் ரூ.180 கோடியும், 2017-18 ஆம் ஆண்டில் ரூ.260 கோடியும், 2018-19 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.522 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை ரூ.214 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.308 கோடி கடன் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும்.
மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகள், சுய தொழில் புரியும் சுமார் 1,900 பேர்களுக்கு கடந் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம்களில் அனைத்து வங்கிக் கிளைகளின் மேலாளர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கிட வேண்டும். அதேநேரம், கடன் பெறுவதற்கு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள தகுதி வாய்ந்த கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து விரைந்து வழங்க வேண்டும் என்றும் வங்கியாளர்களை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்றார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் பிரவீன் பி.நாயர், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர் ராஜ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன கூடுதல் இயக்குநர் கணேஷ் கண்ணா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெங்கட்ராமன், மகளிர் திட்ட இயக்குநர் கு.செல்வராசு உள்ளிட்ட அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com