அன்னூர் அருகே உப்புத் தோட்டம் பகுதியில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அன்னூர் அருகே உப்புத் தோட்டம் பகுதியில் பொங்கல் விழாவை ஒட்டி பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. பெண்கள் பாட்டுப்பாடிக் கும்மியடித்தனர். குழந்தைகளின் கலைநிகழ்சிகள் நடைபெற்றன. பெண்கள், குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.