காரின் பின்னால் இரு சக்கர வாகனம்: மோதியதில் தொழிலாளி சாவு

சூலூர் அருகே நின்றுகொண்டிருந்த காரின் பின்னால் இரு சக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார். 

சூலூர் அருகே நின்றுகொண்டிருந்த காரின் பின்னால் இரு சக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார். 
சூலூரை அடுத்த பட்டணம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (38). இவர் அதே பகுதியில் பிளம்பராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இரு குழந்தைகளும் எல் அன்டு டி புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். 
இந்நிலையில், சிவராஜ் தனது மகனை பள்ளியில் விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை அழைத்துச் சென்றார். சிந்தாமணிபுதூர் நோக்கி புறவழிச்சாலை வழியாக சென்றபோது சாலையில் நின்று கொண்டிருந்த காரின் பின்னால் இரு சக்கரவாகனம் மோதியது. இதில் சிவராஜ் மற்றும் அவரது மகன் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தனர். இதில் சிவராஜ் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 
உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com