பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஜலத்தூரைச் சேர்ந்தவர் அருண்குமார் (19). இவரது நண்பர்கள் வீரன் (30), சந்தோஷ் (19) . இவர்கள் மூவரும் பொள்ளாச்சியில் இருந்து ஜலத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தனர். அய்யம்பாளைம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் இவர்களது இருசக்கர வாகனத்தின் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வீரன், சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அருண்குமார் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.