கோவையில் இருவேறு இடங்களில் பாஜகவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலம் முன்பும், வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி பார்க் அருகிலும் பாஜகவை கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பட்டம் நடத்தினர்.
இதில் கர்நாடக மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு பாஜகவே காரணம் எனவும், கார்நாடக அரசில் மேற்கொள்ளும் குதிரை பேரத்தை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதில் மாநில துணைத் தலைவர் எம்.என்.கந்தசாமி, பொதுச் செயலாளர் வீனஸ் மணி, வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், கலைப் பிரிவு மாநிலச் செயலாளர் துளசிராஜ், மாநில பொதுக் குழு உறுப்பினர் கணபதி சிவகுமார், பொருளாளர் சௌந்தரகுமார், வழக்குரைஞர் கருப்புசாமி உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.