சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
நீலாம்பூர், டோல்கேட் அருகே ஒரு இளநீர் கடை முன் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக சூலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிந்து, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.