கோவை சரக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக ஐ.அன்வர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வனத் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
சேலம் சரகத்தின் தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த ஐ.அன்வர்தீன், கூடுதல் பொறுப்புகளுடன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு கோவைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது கோவை சரகத்தின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகவும், கோவையில் உள்ள தமிழ்நாடு வனப் பயிற்சி அகாதெமியின் இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கோவை சரக வனப் பாதுகாவலராகவும், களக்காடு, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் கள இயக்குநராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள ஐ.அன்வர்தீன் விரைவில் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.