மாவட்ட நீதிமன்றத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள நகல் பரிசோதகர், துப்புரவுப் பணியாளர்கள்

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள நகல் பரிசோதகர், துப்புரவுப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்ட சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 11 நகல் பரிசோதகர் / நகல் படிப்பவர், 16 முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், 21 அலுவலக உதவியாளர்கள், 16 காவலர்கள், 4 துப்புரவுப் பணியாளர்கள், 5 தூய்மைப் பணி செய்பவர்கள், 10 மசால்சி (அலுவலக உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மேலும், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்ற வலைதளமான d‌i‌s‌t‌r‌i​c‌t‌s.‌e​c‌o‌u‌r‌t‌s.‌g‌o‌v.‌i‌n/​c‌o‌i‌m​b​a‌t‌o‌r‌e​  இல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்பிக்க ஜூன் 28 ஆம் தேதி இறுதி நாள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com