சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் அரசு அனுமதியின்றி மது விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சூலூர் வட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீஸாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதையடுத்து பள்ளபாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த பாரதிபுரத்தைச் சேர்ந்த கதிரேசன் (49), ராமநாதபுரம் மாவட்டம், சிறு மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (28), சிவகங்கை மாவட்டம், மாராமங்கலம் பகுதியைச் சேர்ந்த டேவிட் (31) ஆகியோர் அப்பகுதியில் அனுமதியின்றி மதுவிற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களை போலீஸார் கைது செய்து நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.