சாலை விபத்தில் தொழிலாளி பலி

மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது இலகு ரக வாகனம் மோதியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது இலகு ரக வாகனம் மோதியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பெள்ளேபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (எ) தங்கராஜ் (47). தொழிலாளியான இவர், தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் நான்குசாலை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அப்போது அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த இலகு ரக வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தங்கராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த காரமடை போலீஸார் அங்கு வந்து தங்கராஜின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com