பொள்ளாச்சி அருகே ஆழியாறில் உள்ள ஆஸ்ரமத்தில் ரூ.14 லட்சம் கையாடல் செய்ததாக பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆழியாறில் ஆஸ்ரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்ரமத்தில் யோகா மற்றும் உடல் ஆரோக்கிய பயிற்சிகள் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆஸ்ரமத்தில் கணக்காளராகப் பணிபுரியும் சமத்தூரைச் சேர்ந்த வளர்மதி (41) மீது ஆஸ்ரமத்தின் நிர்வாகி வினய்கோபால் ஆழியாறு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
அதில், ஆஸ்ரமத்துக்கு பயற்சிக்காக வருபவர்களிடம் பணம் பெற்றுவிட்டு, அந்தத் தொகையைவிட குறைவான தொகைக்கு ரசீது வழங்கி கடந்த சில மாதங்களில் ரூ.14 லட்சம் வரை வளர்மதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆழியாறு போலீஸார் வளர்மதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.