இரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: திமுக பிரமுகர் மகன் கைது

இரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வால்பாறை திமுக பிரமுகர் மகனை போலீஸார் போக்úஸா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வால்பாறை திமுக பிரமுகர் மகனை போலீஸார் போக்úஸா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
 கோவை மாவட்டம், வால்பாறை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரவி (எ) ரவிச்சந்திரன். இவர் திமுக கோவை மாவட்ட ஆதிதிராவிட பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார்.
 இவரது 16 வயது மகன், வீட்டின் அருகே வசிக்கும் கூலித் தொழிலாளியின் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 இந்நிலையில், சிறுமி வீட்டில் இல்லாததைத் தொடர்ந்து அவரது தாய் பக்கத்து வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
 இதையடுத்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை போக்úஸா சட்டத்தில் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com