பங்குனி மாத முதல் சனிக்கிழமையொட்டி மருதூர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே மருதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா விமரிசையாக நடைபெறும். பங்குனி மாத முதல் சனிக்கிழமை ஒட்டி அனுமந்தராய சுவாமிக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. முன்னதாக புலவர் அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு, முத்துக்கல்லூர், சுண்டக்கரைப்புதூர், காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுவினரின் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.