குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயில்பங்குனி உத்திர தேர்த் திருவிழா: நாளை கொடியேற்றம்

மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி முருகன் கோயிலில் பங்குனி உத்திர

மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவையொட்டி கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) துவங்குகிறது.  தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் மார்ச் 20 ஆம் தேதியும்,  திருத்தேரோட்டம் மார்ச் 21 ஆம் தேதி மாலை 5 மணிக்கும்  நடைபெறுகிறது. தொடர்ந்து பரிவேட்டை, தெப்ப உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்  அலுவலர் பெரிய மருதுபாண்டியன் செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com