கோவை மக்களவைத் தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளைப் பர்வையிட தேர்தல் பார்வையாளர்கள் திங்கள்கிழமை (மார்ச்18) கோவைக்கு வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா, செலவின கணக்குகளை ஆய்வு செய்ய ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மற்ற மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர்.
அதன்படி கோவைக்கு நியமிக்கப்பட்டுள்ள செலவின கணக்கு பார்வையாளர்கள், தேர்தல் நடத்தை விதிகள் பார்வையாளர்கள், கோவை தொகுதியில் தேர்தல் பணிகளை பார்வையிட திங்கள்கழமை வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.