பெண்ணிடம் நகைப் பறிப்பு

சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்த நபர் பெண்ணிடம் நகையைப் பறித்து சென்றார். 

சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்த நபர் பெண்ணிடம் நகையைப் பறித்து சென்றார். 
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பட்டுமாரி. இவர்கள் சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் மளிகைக் கடை  நடத்தி வருகின்றனர். 
இவரது கடைக்கு பொருள்கள் வாங்க ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு வந்துள்ளார். பொருள் வாங்கிய பின்னர் அதற்கு பில் கேட்டுள்ளார். அப்போது பட்டுமாரி பில் போட்டுக்கொண்டிருந்தபோது, அவரிடம் இருந்த  5 பவுன் சங்கிலியை பறித்துகொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.  அப்போது பட்டுமாரி சப்தமிடவே, அந்த நபர்,  தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com