அன்னூர் கிளை நூலகத்துக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வண்ணம் பூசி புனரமைப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அன்னூர் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் ரஜினி வெங்கட் தலைமை வகித்கார். பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கே.சி.கே.விஜயகுமார் முன்னிலை வகித்தார். நூலகர் சிவகுமார் வரவேற்றார். ரஜினி மக்கள் மன்றத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் வி.எம்.கிருஷ்ணமூர்த்தி புனரமைக்கப்பட்ட நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். மேலும் நூலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து அதே பகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒன்றிய அலுவலகத்தை மாவட்ட செயலாளர் கதிர்வேல் திறந்துவைத்தார். மேலும், அன்னூர் தெற்கு துவக்கப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.