பொள்ளாச்சி அருகே ரூ.5.55 லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி வழியாக கணக்கில் வராமல் கொண்டுசெல்லப்பட்ட  ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 300 தொகையே தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.                                     


பொள்ளாச்சி வழியாக கணக்கில் வராமல் கொண்டுசெல்லப்பட்ட  ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 300 தொகையே தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.                                     
பொள்ளாச்சியை அடுத்த நல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மகேந்திரா வேனில் வந்த கிருஷ்ணகுமார் (22) என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 
அதேபோல், கேரளத்தில் இருந்து திருச்சிக்குச் சென்ற வேனில் யூசப் (55) என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கேரளத்தில் இருந்து கரூருக்குச் சென்ற வேனில் வந்த ராஜசேகர் (36) என்பவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 300ஐ பறிமுதல் செய்தனர். 
 மொத்தம் ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 300ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com