கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கமம் அமைப்பின் செயற்குழுக் கூட்டம்

கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கமம் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கமம் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் செ.துரைசாமி தலைமை வகித்தார். செயலர் கா.ப.கலையரசன், பொருளாளர் ந.மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 தமிழக அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பை மக்கள் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். அனைத்து வாகனங்களிலும் பதிவு எண்ணை தமிழில் எழுத வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com