சூலூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலையொட்டி அத்தொகுதி தேர்தல் பார்வையாளர் அருண்குமார் தலைமையில் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.பாலகிருஷ்ணன், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராஜ் மற்றும் அனைத்துக் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதில் வாக்கு சேகரிக்கும் இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, வாக்குப் பதிவின்போது எவ்வாறு அரசியல் கட்சியினர் நடந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தேர்தல் நடத்தை நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன.