தவறான சிகிச்சையால் பிளம்பர் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனை மீது புகார்
By DIN | Published On : 05th May 2019 03:48 AM | Last Updated : 05th May 2019 03:48 AM | அ+அ அ- |

காளப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் பிளம்பர் உயிரிழந்ததாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைபூண்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சரவணன் (41). இவர் தனது மனைவியை பிரிந்து காளப்பட்டியில் உள்ள மகனுடன் தங்கி பிளம்பர் தொழில் செய்து வந்தார். இந் நிலையில், அவருக்கு வியாழக்கிழமை இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, காளப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் சரவணன் உயிரிழந்ததாக அளித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...