மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்துக்கு உள்பட்ட ஆதிமாதையனூர் கிராமத்தில் இரவு நேரத்தில் விளை நிலங்களில் காட்டுயானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆதிமாதையனூர் கிராமத்தை ஒட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 நாள்களாக வனத்தில் இருந்து வெளியேறிய 8 காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.