முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
காரமடை ஆர்.வி. கல்லூரியில் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு
By DIN | Published On : 18th May 2019 06:28 AM | Last Updated : 18th May 2019 06:28 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சுந்தர், கல்லூரி முதல்வர் வே.சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி அறங்காவலர் வெ.கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராப் பங்கேற்று உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள உபகரணங்களை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் திருப்பதி செய்திருந்தார்.