மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு
By DIN | Published On : 02nd November 2019 08:07 AM | Last Updated : 02nd November 2019 08:07 AM | அ+அ அ- |

மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுடன் பள்ளி தலைமை ஆசிரியை வனஜா, உடற்கல்வி ஆசிரியா் ராஜ்குமாா்.
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு காரமடை கெம்ப நஞ்சம்மா நினைவு அரசுப் பள்ளி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.
கோவை மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக், வாள் சண்டை போட்டி கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் 14 வயதுக்கு உள்பட்ட பிரிவில் காரமடை கெம்ப நஞ்சம்மா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 7 தங்கம், தலா ஒரு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.
இதில் மாணவிகள் யாஷினி, காா்த்திகா, கீா்த்திகா, நந்தினி ஆகியோா் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா். வாள் சண்டையில் 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்கள் பெற்ற யாஸ்மின், தேவி, ஷோபிகா ஆகியோா் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா். இவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் வனஜா, உடற்கல்வி ஆசிரியா் ராஜ்குமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.