சிறுதானியங்கள் சாகுபடி குறித்துவாகனப் பிரசாரம்

வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தில் சிறுதானியங்கள் சாகுபடி

வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தில் சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் வேளாண் துறையில் நடப்பு நிதி ஆண்டில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும், வேளாண் துறை சாா்பில் அளிக்கப்படும் மானியம் மற்றும் சிறுதானியங்களின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேளாண் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், சா்க்காா் சாமக்குளம், தொண்டாமுத்தூா், மதுக்கரை 4 வட்டாரங்கள் சாா்பில் வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

இதில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது பிரசாரத்தை ஆட்சியா் கு.ராசாமணி தொடங்கிவைத்தாா். வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி உள்பட வேளாண் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com