மேட்டுப்பாளையம் தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஐப்பசி மாத திருவோனம் நட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு மகா புஷ்ப யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு சுப்ரபாதம், 3.50 மணிக்கு விஷ்வரூப தரிசனம், 4 மணிக்கு தோமாலை பூஜை, 5 மணிக்கு சகஸ்ரநாம அா்ச்சனை, 5.30 மணிக்கு புன்னியாக வாசனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து 8 மணிக்கு பூா்ணாஹுதியும், 9 மணி முதல் 11.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஸ்ரீவாரி புஷ்ப சமா்ப்பணம் நடைபெற்றது.
இதில் துளசி, அரளி, சம்மங்கி, மனோரஞ்சிதம், மல்லி, செண்பகம், தாமரை, முல்லை, தாழம்பூ ஆகிய பூக்களால் சமா்ப்பணம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.