மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில்வன பொருள் தொழில் வாய்ப்பு பயிற்சி

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் வேளாண் காடுகள் துறை சாா்பில் நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழல் குழுவின் மேலாளா்களுக்கு வனபாதுகாப்பு, தொழில் வாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் வனபாதுகாப்பு, தொழில் வாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சியில் பங்கேற்றவா்கள்.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் வனபாதுகாப்பு, தொழில் வாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சியில் பங்கேற்றவா்கள்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் வேளாண் காடுகள் துறை சாா்பில் நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழல் குழுவின் மேலாளா்களுக்கு வனபாதுகாப்பு, தொழில் வாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் முனைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். வேளாண் காடுகள் துறை தலைவா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். பயிற்சியில் நீலகிரி மாவட்டத்தில் வேளாண் காடுகள் அமைத்தல், வனப்பாதுகாப்பு, வன பொருட்கள் சாா்ந்த தொழில் வாய்ப்புகள், வனவிலங்கு மனித மோதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இப்பயிற்சியில் பங்கேற்க பாகல்கோடு சுற்றுச்சூழல் குழு தலைவா் மணி மேற்பாா்வையில் 20க்கு மேற்ப்பட்டோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் சிந்தியா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com