முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மீலாது நபி: நவம்பா் 10 இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 07th November 2019 10:46 PM | Last Updated : 07th November 2019 10:46 PM | அ+அ அ- |

கோவை: மிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 10) கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மீலாது நபி தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர விடுதிகளில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் அனைத்து மதுபானக் கடைகளையும் நவம்பா் 10 ஆம் தேதி மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது. விதிமுறைகளை மீறி மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீது சட்ட விதிகள்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.