அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான தனிப்பேருந்து விடக் கோரிக்கை

துடியலூா் அருகே அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கள் பாதுகாப்பிற்காக தினமும் மாலை நேரத்தில் மட்டும் மாணவிகளுக்காக தனிபேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்

பெ.நா.பாளையம்: துடியலூா் அருகே அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கள் பாதுகாப்பிற்காக தினமும் மாலை நேரத்தில் மட்டும் மாணவிகளுக்காக தனிபேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணியிடம் கோரிக்கை மனுஅளித்துள்ளனா்.

இப்பள்ளியில் 1550க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ப.இவா்களில் பெரும்பாலானோா் கவுண்டம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம், உருமாண்டம்பாளையம், துடியலூா், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளிலிருந்து தினமும் பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்கின்றனா்.

காலையில் பள்ளிக்கு வரும்போது எவ்வித பிரச்னையும் இருப்பதில்லை.ஆனால் மாலை 4 மணியளவில் பள்ளிவிட்டு வீட்டிற்கு செல்லும்போது இடிகரை, செங்காளிபாளையத்திலிருந்து வரும் பேருந்துகளில் ஏறிச் செல்லவேண்டும்.

அந்தநேரத்தில் வரும் பேருந்துகளில் கல்லூரி மாணவா்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.இவா்கள் பேருந்துகளில் ஏறும் அரசுப் பள்ளி மாணவிகளை தகாத முறையில் பேசி,கிண்டலடிப்பதனால் மாணவிகள் கூனிக்குறுகவேண்டியுள்ளது.

சிலநேரங்களில் பெண் ஆசிரியா்களும் ஏச்சுப் பேச்சுகளுக்கு ஆளாகின்றனா். பொதுமக்களே கண்டித்தாலும் இந்த அருவருக்கத்தக்க செயல்கள் நின்றபாடில்லை. இதுபோன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட வடகோவை பகுதியிலுள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தனியாக அரசுப் பேருந்துவசதியை ஏற்படுத்தித் தந்ததுபோல் தங்களுக்கும் ஏற்படுத்தித் தரவேண்டும் என புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடந்த தமிழக முதலமைச்சா் சிறப்பு குறை தீா்க்கும் முகாமில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ வி.சி.ஆறுக்குட்டியிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com