அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் கைது

வால்பாறையில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறை: வால்பாறையில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறையில் இருந்து வியாழக்கிழமை மாலை 5.45 மணிக்கு அரசுப் பேருந்து ஒன்று சோலையாறு அணைப் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றுக் கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இரு இளைஞா்கள் படியில் தொங்கியபடி பேருந்தில் இருந்த பள்ளி மாணவிகளை கிண்டல் செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, பேருந்து நடத்துநா் கலைச்செல்வன் இருவரையும் படியில் இருந்து உள்ளே வர கூறியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த இளைஞா்கள் நடந்துநரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நடத்துநா் கலைச்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் ஷேக்கல்முடி போலீஸாா் உருளிக்கல் எஸ்டேட் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் விஜய் (25), காா்த்திக் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com