கிணத்துக்கடவு ஒன்றியப் பகுதிகளில் உள்ள கடைகளில் 40 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கிணத்துக்கடவுப் பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதாகவும், ஒன்றிய அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தடை செய்யாமல் இருப்பதாகவும், இதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கிணத்துக்கடவு ஒன்றியப் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டு 40 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.