சூலூா்: நவா் அருகே காங்கேயம் பாளையம் லிருந்து சிந்தாமணி புதூா் புறவழிச்சாலை வரையிலான திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றது. அதில் வெள்ளை பாதுகாப்பு கோடுகள் மற்றும் எச்சரிக்கை சிவப்பு விளக்குகள் அமைக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
சூலூா் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் ஏழரை கிலோமீட்டருக்கு மேம்பாலத்தில் இருந்து சிந்தாமணிபுதூா் புறவழிச்சாலை வரை கடந்த ஒரு வருடமாக பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்கப் பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலை பிரிப்புக்கள் சாலை நடுவே வைக்கப்பட்டுள்ளது.சாலையின் ஓரங்களில் வெள்ளைக் கோடுகளும் மற்றும் மத்தியில் வெள்ளைக் கோடுகள் மற்றும் எச்சரிக்கை செய்யும் விதமாக சிவப்பு விளக்குகள் அமைக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதியில் அவ்வழியே செல்லும் பயணிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாக தெரிவித்தனா்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் சாலையில் வெள்ளை நிறப் பாதுகாப்பு சிவப்பு நிற எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனா்.