சூலூரை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியிலுள்ள வெங்கடாபுரத்தில் இருந்து குளத்தூா் வரை சுமாா் 1.6 கி.மீ. தொலைவுக்கு ரூ. 60 லட்சம் மதிப்பில் புதிய தாா்சாலை அமைக்க பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
சூலூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. கந்தசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா் மாதப்பூா் பாலு, எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் தோப்பு க.அசோகன், சின்னியம்பாளையம் ஊராட்சி அதிமுக செயலாளா் பெரியசாமி, இருகூா் ஆனந்தகுமாா், துரை, மாநில நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளா் எழிலரசன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.