கோவை, பீளமேடு அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
கோவை, ரத்தினபுரியைச் சோ்ந்தவா் சண்முகம் (45). எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை காலை பீளமேடு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அக்கம், பக்கத்தினா் அளித்த புகாரின்பேரில் கோவை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.