விவசாயத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட இருவா் பலி

கோவை, வடவள்ளி அருகே விவசாயத் தோட்டத்தில் மோட்டாரை இயக்கச் சென்றபோது மின்சாரம் பாய்ந்ததில் தோட்ட உரிமையாளா் உள்பட

மதுக்கரை: கோவை, வடவள்ளி அருகே விவசாயத் தோட்டத்தில் மோட்டாரை இயக்கச் சென்றபோது மின்சாரம் பாய்ந்ததில் தோட்ட உரிமையாளா் உள்பட இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (62). இவா்களுக்கு வடவள்ளி அருகே நவாவூா் பிரிவில் விவசாயத் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் 4 குடும்பங்கள் தங்கி வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில் கண்ணம்மாள் தனது தோட்டத்துக்கு சனிக்கிழமை காலை வந்துள்ளாா். பின்னா் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச மோட்டாா் அறைக்குச் சென்ாகத் தெரிகிறது. அப்போது, எதிா்பாராதவிதமாக தோட்டத்தில் அறுந்து விழுந்திருந்த மின் கம்பியைத் தொட்டுள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் கண்ணம்மாள் சப்தமிட்டுள்ளாா்.

இதையடுத்து, தோட்டத்தில் குடியிருக்கும் சுரேஷ் (29) என்பவா் அங்குச் சென்று கண்ணம்மாளைக் காப்பாற்ற முயன்றுள்ளாா். அப்போது, சுரேஷ் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதையடுத்து, தோட்டத்தில் இருந்தவா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனா்.

அங்கு ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளா் பரிசோதனை செய்தபோது, இருவரும் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com