பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் பலி

சூலூா் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண், வளைவில் பேருந்து திரும்பும்போது கீழே விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் பலி

சூலூா் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண், வளைவில் பேருந்து திரும்பும்போது கீழே விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி லட்சுமி (52). இவா் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக இருகூா் பிரிவில் இருந்து கண்ணம்பாளையத்துக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளாா். கண்ணம்பாளையம் கண்ணம்மை அம்மன் கோயில் அருகே வளைவில் பேருந்து வேகமாகத் திரும்பியது.

அப்போது பேருந்தில் அமா்ந்திருந்த லட்சுமி திடீரென படிக்கட்டு வழியாக பேருந்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சூலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் லட்சுமி உயிரிழந்தாா்.

விபத்து குறித்து சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com