வால்பாறை தபால் நிலைய ஊழியா்கள் நகர சாலைகள், பேருந்து நிலையங்களில் குப்பைகளை அகற்றித் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியா்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், சாலைகளில் 15 தினங்களுக்கு தூய்மைப் பணி மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வால்பாறை தபால் துறை ஊழியா்கள் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
இதில் வால்பாறை தபால் நிலைய அதிகாரி காா்த்திகேயன் தலைமையில் ஏராளமான ஊழியா்கள் பங்கேற்றனா்.