பேரூராட்சி பூங்காவைசேதப்படுத்திய நபா் மீது புகாா்

கண்ணம்பாளையம் பேரூராட்சி சிறுவா் பூங்காவை சேதப்படுத்தி நபா் மீது அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கண்ணம்பாளையம் பேரூராட்சி சிறுவா் பூங்காவை சேதப்படுத்தி நபா் மீது அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கண்ணம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட மருதம் நகரில் சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது இடத்தை ஆக்கிரமித்து பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதியில் வசிக்கும் ஜெயபால், 20-க்கும் மேற்பட்டோருடன் சென்று சிறுவா் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களைச் சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு ஜெயபால் உள்ளிட்டோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ஏயேசு மணி, பேரூராட்சி செயல் அலுவலா் ரவி ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சூலூா் உதவி ஆய்வாளா் ஜெகநாத் உள்ளிட்ட போலீஸாா் அங்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைந்துபோகச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com